பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது !

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது !

 வள்ளிகும்மியாட்டம் மூலம் பெண்கள் மத்தியில் உள்ள தயக்கத்தை போக்கி பாதுகாப்பை உறுதி செய்கிறது என கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேசினார்.

வள்ளிகும்மியாட்டம் மூலம் பெண்கள் மத்தியில் உள்ள தயக்கத்தை போக்கி பாதுகாப்பை உறுதி செய்கிறது என கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேசினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில மாநாட்டிற்கு கால் கோள்விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொது செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கொங்கு மண்டலத்தில் ஏராளமானவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் தவறாக வழக்கு பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.இது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறேன் என்றார். தமிழக அரசு ஆளுநருடனான இணக்கமான சூழல் வரவேற்கத்தக்கது என்றும் தொடர்ந்து இணக்கமான சூழல் நிகழ்ந்தால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் என்றார். வள்ளி கும்மியாட்டம் மூலம் பெண் குழந்தைகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் , அவர்கள் மத்தியில் தயக்கம் என்கிற பெரிய வியாதி உள்ளதால் அதை பயன்படுத்தி பல்வேறு அமைப்பினர் உள்நோக்கத்தோடு பல்வேறு செயல்களில் ஈடுபடுவதால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் , பெண்கள் மத்தியில் உள்ள தயக்கத்தை போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாக அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றார்

Tags

Next Story