பதக்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

கோவாவில் நடந்த 37வது தேசிய போட்டியில் ஸ்கை மாசிலாஸ் அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு சார்பில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு கும்பகோணத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கும்பகோணம் ஸ்கை மாஷிலாஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவாவில் நடந்து முடிந்த 37வது தேசிய போட்டியில் பதக்கம் வென்ற குணாளன், சந்தோஷ், நிரஞ்சன், சாரதி, ராகினி, ஷோபனா ஆகியோருக்கு ஊக்கத் தொகைகளை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். சர்வதேச முதல் நிலை நடுவர் ஸ்கை அசோகேஷன் மாநில பொதுச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story