ஆதியோகி சிவன் ரதத்திற்கு உற்சாக வரவேற்பு

ஆதியோகி சிவன் ரதத்திற்கு உற்சாக வரவேற்பு

வழிபாடு 

ராமநாதபுரம் பகுதிக்கு வந்த ஆதியோகி சிவன் ரதத்திற்கு ஏராளமான பொதுமக்கள் சூடம் காட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை ஈஷா மையத்தில் இருந்து தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு மகா சிவராத்திரி மார்ச் எட்டாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு ஆதியோகி சிவன் ரதம் ராமநாதபுரம் அருகே வழுதூர் கிராமத்திற்கு வருகை புரிந்தது அதற்கு ஏராளமான பெண்கள் மலர்கள் தூவி சூடம் காண்பித்து தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை செய்து வரவேற்றனர். அதன் பின்பு சற்குரு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மகா சிவராத்திரி அன்று அனைத்து பொதுமக்களும் சிவனை வழிபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர் இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட ஈஷா தொண்டர்கள் செய்திருந்தனர். இதே போல வாலாந்தரவை ரகுநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சிறப்பான வரவேற்பு பொதுமக்களால் கொடுக்கப்பட்டது.

Tags

Next Story