பாமக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

பாமக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
உற்சாக வரவேற்பு
அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் பிரச்சாரத்திற்கு சென்ற பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலூர் மொறப்பாக்கம் பெரும்பாக்கம் செம்பூண்டி உள்ளிட்ட சுமார் 20 -க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ,தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் போட்டியிடும் ஜோதி வெங்கடேசன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது பொதுமக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story