சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

மாநில அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய சிவகங்கை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாநில அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய சிவகங்கை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஊட்டியில் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர். சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வீரவிதை சிலம்ப அணி மாணவர்கள் கலை வளர்மணி டாக்டர் பெருமாள் தலைமையில் பங்கேற்று 8 பேர் முதல்பரிசையையும், 7 பேர் இரண்டாம் பரிசையையும்,9 பேர் மூன்றாம் பரிசையையும் வென்று சிவகங்கை மாவட்டத்திற்க்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மானாமதுரை ஆனந்தவள்ளியம்மன் கோவில் அருகே மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் மாணவர்களை வரவேற்றனர்

Tags

Next Story