மத்திய இணை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

சங்ககிரியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம் என்னும் மக்கள் கருத்து கேட்கும் பெட்டியை சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக மத்திய பிரதேசத்திலிருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய இணை அமைச்சர் எல்‌.முருகன் சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு வருகை புரிந்தார். அவருக்கு சேலம் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய அவர் 2047ம் ஆண்டுக்கான நாட்டின் வளர்ச்சி பாதை திட்டத்தினை எடுத்துச் செல்வதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி நடைபெற்று வருவதாகவும் தேர்தல் 2019.ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை 99 சதவீதம் நிறைவேற்றிவிட்டு தான் 2024 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மோடி சந்திக்கிறார் எனவும் என்வும் பேசினார் .

தொடர்ந்து வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம் என்னும் பொது மக்களிடம் கருத்து கேட்கும் பெட்டியை சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக தொடங்கி வைத்தார். அப்போது மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன் உட்பட பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story