பள்ளி செல்லா இடை நின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு

பள்ளி செல்லா இடை நின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு

இடைநின்ற  மாணவர்கள் சேர்ப்பு

பள்ளி செல்லா இடை நின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இடைநின்ற பள்ளி செல்லும் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பதற்கான கூட்ட ஆய்வு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முத்து தலைமை வகித்தார்.

இதையடுத்து திருப்பத்தூர் வட்டத்துக்கு உட்பட்ட இந்திராநகர், கல்வெட்டு மேடு, நரிக்குறவர் குடியிருப்பு, பிரபாகர் குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்த்தனர்.

இதில் குழந்தைகள் உதவி மையத்தை சேர்ந்த கார்த்திகேயன், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு தலைமை காவலர் கயல்விழி, வட்டார கல்வி அலுவலர்கள் குமார், சாந்தி, மேற்பார்வையாளர் அழகு ராணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story