சேலத்தில் தேசிய பசுமைப்படை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி

சேலத்தில் தேசிய பசுமைப்படை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி

பரிசுகள் வழங்கல்

சேலத்தில் தேசிய பசுமைப்படை சார்பில்சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.

சேலம் மாவட்ட பசுமைப்படை சார்பில் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு போட்டிகள் அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. முதன்மை கல்வி அதிகாரி கபீர் தலைமை தாங்கினார். 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுற்றுச்சூழல் தொடர்பான பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு மொத்தம் 90 பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி வன பாதுகாவலர் செல்வகுமார், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர் மாரியப்பன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

சேலம் மாவட்ட சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் லோகநாதன் (சேலம்), ரகுநாத் (நாமக்கல்) ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags

Next Story