சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு போட்டிகள்

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு போட்டிகள்

செஞ்சியில் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேச்சு, ஓவியப் போட்டிகள் நடந்தன. 

செஞ்சியில் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேச்சு, ஓவியப் போட்டிகள் நடந்தன.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பரிசு வழங்கினார். இதில் சுற்றுச்சூழல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், தேசிய பெருமை படை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், ஆசிரியர் மணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story