சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு
புகழஞ்சலி
சுற்றுச்சூழல் பாதுகாவலர் அமரர் தில்லை ஜி ராமமூர்த்தியின் நினைவு தின புகழ் அஞ்சலி கூட்டம்

என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாவலர் அமரர் தில்லை ஜி ராமமூர்த்தியின் நினைவு தின புகழ் அஞ்சலி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வ விவேகானந்தம் தலைமை வகித்து பேசினார். அப்போது தில்லை ஜி ராமமூர்த்தியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அலையாத்தி காடுகள் பாதுகாப்பு ,மூலிகை சிகிச்சை, கோவில் காடுகள் , மரம் வளர்ப்பு மீன் வளர்ப்பு, சமூக நல்லிணக்க பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் கீழ்கண்ட நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் தலைவர் வ.விவேகானந்தம் துணைத்தலைவர் ரெஜினால்ட் செல்வகுமார் செயலாளர் ஈகாவைத்தியநாதன் துணைச்செயலாளர் ஜி.ஜெயசீலன் பொருளாளர் மா.வீரபத்திரன் மக்கள் தொடர்பாளர் மா.சுகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வருகிற கல்வியாண்டில் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி வழங்குதல் பட்டுக்கோட்டை வட்டம் புதுக்கோட்டை உள்ளூர் செல்லிக்குறிச்சி ஏரியை சீரமைத்து சுற்றுலா தலமாக்கவும், டெல்டா பகுதியில் பாசனவசதிகளை மேம்படுத்த ஆறு, கால்வாய்கள் குளங்களை விரைவில் தூர்வாரும் பணிகளை துவக்க வேண்டி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story