வீதி நாடகங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு!

வீதி நாடகங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு

தூத்துக்குடியில் வீதி நாடகங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. 
தூத்துக்குடி மாவட்ட அளவில், வீதி நாடகங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார குழு இன்று தூத்துக்குடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு நுழைவாயிலில் கலை வடிவில் தனது பிரச்சாரத்தை காலையில் துவக்கியது. இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நல்லாசிரியர் சம்பத்சாமுவேல், வானியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி வன்னியப்பன், இராமநாதபுரம் மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பெனடிக்ட், மற்றும் கலைக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், நெகழி மற்றும் மின்னணு கழிவுகளை பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்வது குறித்தும் புவிவெப்பநிலை குறைக்க மரங்கள் நடுவது பற்றியும் பாடல் கிராமிய கலைகளை நிகழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் காலனி மக்கள் ஏராளமான பேர் கலந்துகொண்டார்கள்.

Tags

Next Story