மருது சகோதரர்கள் சிலைக்கு இ.பி.எஸ் மரியாதை

மருது சகோதரர்கள் சிலைக்கு இ.பி.எஸ் மரியாதை

எடப்பாடி பழனிசாமி

மருது சகோதரர்கள் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
தெப்பக்குளம் மருது சகோதரர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் பசும்பொன் செல்வதற்காக மதுரை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கரகாட்டம்,சிலம்பாட்டம் மேளதாளங்களுடன் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்த எடப்பாடிக்கு அதிமுக நிர்வாகிகள் வீரவாள் பரிசாக வழங்கினர்.இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு,ஆர் பி உதயகுமார், ராஜன் செல்லப்பா , ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் மற்றும் ஏனைய அதிமுக கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்த எடப்பாடி பழனிசாமி பசும்பொன் கிராமம் நோக்கி புறப்பட்டு சென்றார்.

Tags

Next Story