சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர்கள் சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுகொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தலைமையில் ''சமத்துவ நாள் உறுதிமொழி'' ஏற்கப்பட்டது உறுதிமொதி பின்வருமாறு, சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வுவை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஜெயபால், குகன் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் மாவட்ட காவல் அலுவலர்கள் கலந்துகொண்டு சமத்துவ நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

Tags

Next Story