பெண்கள் தனி சிறையில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

மதுரையில் பெண்கள் தனி சிறையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது.

மதுரை பெண்கள் தனி சிறையில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் மதுரை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள பெண்கள் தனி சிறையில் பொங்கல் விழா கொண்டாட்டம் சிறப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் திரு பழனி அவர்கள் தலைமையில் மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு சதீஷ்குமார் முன்னிலையில் மதுரை ஹோலி ஃபேமிலி பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சிகளுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மேலும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சுமார் 170 பெண் சிறைவாசிகள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரிசன் மினிஸ்ட்ரி ஆப் இந்தியா நிர்வாகிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது

Tags

Next Story