சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் விழா
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து சமத்துவ பொங்கல் விழா மேல்மருவத்தூர் ஜி பி திடலில் நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், பாரம்பரிய உடையான வேட்டி,சேலை அணிந்து கல்லூரி மாணவ மாணவிகள் பொங்கல் வைத்தனர்.. இந்த நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி முதல்வர் கோ.ப அன்பழகன் அவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கல்லூரி மாணவ மாணவியர்கள் உடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் மாட்டு வண்டியில் உற்சாகமாக பயணம் மேற்கொண்டனர்..இதனைத் மேலும் மாணவ மாணவிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.

Tags

Next Story