சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் விழா

மடப்புரத்தில் புனித அந்தோனியார் ஆலயத்தின் முன்பு, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், 150க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். 

மடப்புரத்தில் புனித அந்தோனியார் ஆலயத்தின் முன்பு, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், 150க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரம் பகுதியில் புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நெல் அறுவடை திருவிழாவை கொண்டாடும் விதமாக காணும் பொங்கல் அன்று பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து பொதுமக்களும் ஒன்றிணைந்து புனித அந்தோணியார் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெறும். இதன் தொடர்ச்சியாக ஆலயம் முன்பாக பொதுமக்கள் ஜாதி, மதம் ,பேதம் இன்றி 150 க்கும் மேற்பட்டோர் பொங்கல் பானை வைத்து வழிபாடு செய்தனர் .இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story