சமத்துவப் பொங்கல் விழா 

சமத்துவப் பொங்கல் விழா 

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் தமுஎகச ஒரத்தநாடு கிளை சார்பில், சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.  

ஒரத்தநாட்டில் தமுஎகச ஒரத்தநாடு கிளை சார்பில், சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் தமுஎகச ஒரத்தநாடு கிளை சார்பில், சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கிளைத் தலைவர் வை.தம்பி அய்யா தலைமை வகித்தார். சாமி.சசிகுமார் வரவேற்றார். ஓய்வு பெற்ற அறநிலையத்துறை இணை இயக்குனர் சி.ஜெயராமன், தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினர் கவிஞர் யாழன் முன்னிலை வகித்தனர். தமுஎகச மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார் வாழ்த்திப் பேசினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் சிறப்புரையாற்றினார். ஒரத்தநாடு வட்டாட்சியர் சுந்தரச்செல்வி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் கோலப்போட்டி, கனியும் கரண்டியும், ஓட்டப்போட்டி, சாக்குப் போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டி ஒருங்கிணைப்பாளர்களாக சுனந்தா சுரேஷ், அருணா தேவி, கலா, கனகராஜ், கருணாநிதி, லெனின், செந்தில்குமார், அரவிந்தன், அழகர், சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story