கீழ்குளம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

கீழ்குளம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
கீழ்குளம் பேரூராட்சியில் பொங்கல் விழா
கீழ்குளம் பேரூராட்சியில் பொங்கலிட்டு கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் முன்னிட்டு, குமரி மாவட்டம் கீழ்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இன்று காலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் தசரளா கோபால் தலைமையில் பொங்கலிட்டு கொண்டாடினர். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் கிருஷ்ணன், லாசர், அல்போன்சால், சுகரா பீபி, ஷோபா, மார்க்கிரட் மேரி, சுகந்தி, ஜாஸ்மின், மல்லிகா, தீபா, சமுத்ரா பாண்டி மற்றும் செயல் அலுவலர் ரகுநாதர், கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி மு க செயலாளர் கோபால், பேரூர் செயலாளர் எஸ். எம். கான், பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மசூர் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story