சமத்துவப் பொங்கல்; அமைச்சர், துணை சபாநாயகர் பங்கேற்பு

சமத்துவப் பொங்கல்; அமைச்சர், துணை சபாநாயகர் பங்கேற்பு

சே.கூடலூர் ஊராட்சியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.  

சே.கூடலூர் ஊராட்சியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தண்டராம்பட்டு ஒன்றியம் சே.கூடலூர் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பொதுமக்களுடன் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), ஒ.ஜோதி (செய்யாறு), மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் மரு.எ.வ.வே.கம்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story