விசிக சார்பில் சமத்துவ பொங்கல், திருச்சி மாநாடு விளக்க பொதுக்கூட்டம்

விசிக சார்பில் சமத்துவ பொங்கல், திருச்சி மாநாடு விளக்க பொதுக்கூட்டம்

விசிக பொதுக்கூட்டம் 

வந்தவாசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் திருச்சி மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வந்தவாசி அடுத்த உள்ள தென்னாங்கூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ பொங்கல் விழா சே.பிரபாகரன், ஜெ.தன்ராஜ் தலைமையில் கொண்டாடப் பட்டது.ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் க.ஐயப்பன், ஒன்றிய பொறுப்பாளர் ஜெ. இயற்கைதாசன் முன்னிலை வகித்தனர் சி.அசோக் மழைதாசன், ஜெ.நாகராஜ் வரவேற்புரை ஆற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டம் - மண்டல துணைச் செயலாளர் ம.கு.மேத்தா ரமேஷ் பேசுகையில் வருகின்ற நாடாளுமன்றத் - தேர்தலில் பாஜக அரசை தோல்வி அடைய செய்து மதவாதி பிடித்த பாஜக அரசு தமிழகத்தையும் - சொற்ப வாக்குகளை பெரும் - என்பதில் சந்தேகம் இல்லை தலித் சமுதாயத்திற்கு இன்று வரை போராடிக் கொண்டிருக்கும் ஒரே தலைவர் தொல். திருமாவளவன் மட்டுமே வருகின்ற ஜனவரி 26 ஆம் நாள் திருச்சி ஜனநாயகம் வெல்லும் மாநாட்டில் நமது ஆதரவையும் தெரிவிக்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ந.வெங்கடேசன், அனக்காவூர் ஒன்றிய சேர்மன் திலகவதி ராஜ்குமார், திரைப்பட இணை இயக்குனர் வி.பிரேம், மகளிர் தொகுதி செயலாளர் மகேஸ்வரி ஆ.முத்துக்குமார், ஆ. தென்னவன், மு.துரை கி. ஆனந்தன் எ.கலைநிலவன், மா.சுதாகர் பெ.வாசு, கு.அன்புவளவன் பரந்தாமன் மு.அருண், ச. சமரன், ர.ஞானவேல்,மு. நவேந்திரன் ரா. குமரேசன், கு.சங்கர், ந. சந்தோஷ், கு.மணிகண்டன்ந. சிவா ஆ.ராஜேஷ், ஆ.சந்தோஷ், ர.சுரேந்தர், சிலம்பரசன், ம.சரத்குமார், யுவராஜ், பூங்காவனம்,மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story