அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

அரசுப்பள்ளி  மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

பரமத்தி வேலூர் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.  

பரமத்தி வேலூர் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரில் செயல்பட்டு வரும் வேர்டு தொண்டு நிறுவனம் மற்றும் கனடாவை சேர்ந்த ஓ.டி.எப் டீச்சர் பெடரேசன் நிறுவனம் ஆகியோர் இணைந்து பொன்மலர்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வடிவியல் பெட்டி, அகராதி மற்றும் புத்தக பை ஆகியவை முனைவர் லோகநாதன் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதன் மூலமாக 50 மாணவ, மாணவிகள் பயன் பெற்றனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, வேர்டு நிறுவன செயலர் சிவகாமவல்லி, ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் சாந்தி நன்றி கூறினார்.

Tags

Next Story