பாப்பாரப்பட்டி அருகே மின்மாற்றியில் ஒரு லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் திருட்டு

பாப்பாரப்பட்டி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் திருட்டு குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி அருகே உள்ள பார்த்துபள்ளம் கிராமத்தில் சின்னசாமி என்ற விவசாயிக்கு தட்கல் திட்டத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். புதிய மின்மாற்றியின் பெட்டி விவசாய நிலம் அருகே கிடந்தது. இதுகுறித்து பாப்பாரப்பட்டி இளநிலை பொறியாளர் சிபி சக்கரவர்த்தி பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் பாப்பாரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காப்பர் கம்பி திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story