கள்ளக்குறிச்சி: சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி: சாராய ஊறல் அழிப்பு

சாராய ஊறல் அழிப்பு 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப்பகுதியில் 2800 லிட்டர் சாராய ஊரல் அழிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படையின் அதிரடி சாராய வேட்டை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா உத்தரவின் பெயரில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் தபிரதாப்குமார் மற்றும் கரியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் தனிப்படை காவலர்கள் கல்வராயன்மலை பகுதிகளில் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது மட்டப்பாறை மேற்கு காட்டுக் கொட்டாய் மற்றும் தேக்கம்பட்டு வடக்கு ஓடை ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 250 லிட்டர்கள் பிடிக்கக்கூடிய 04 பேரல்கள், 200 லிட்டர்கள்பிடிக்கக்கூடிய 09 பேரல்கள் என சுமார் 2,800 லிட்டர் சாராய ஊரல்கள் மற்றும் 03 லாரி டியூப்களில் சுமார் 120 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டும். மேலும் இக்குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story