கல்வராயன்மலை பகுதியில் சாராய ஊறல் அழிப்பு...

கல்வராயன்மலை பகுதியில் சாராய ஊறல் அழிப்பு...

 சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை பகுதியில் இருந்த சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர்.
கள்ளக்குறிச்சிகல்வராயன்மலை பகுதியில் இருந்த சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர். கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில், கரியலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கல்வராயன்மலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தோரங்கூர் மற்றும் மலைக்கோட்டாலம் அருகே பேரல்களில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊறல் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து 2 பேரல்களில் இருந்த 400 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 2 லாரி டியூப்பில் இருந்த 60 லிட்டர் சாராயத்தை அங்கேயே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் ஊறல் வைத்த நபரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story