கரியாலுார் சாராய ஊறல் அழிப்பு

கரியாலுார் சாராய ஊறல் அழிப்பு

கள்ளச்சாராயம் ஊறல் அழிப்பு 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியலூர் பகுதியில் கள்ளச்சாராய ஊறல்களை காவல்துறையினர் அழித்தனர்.
கரியாலுார் சப்இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் கல்வராயன்மலைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சின்னதிருப்பதி மற்றும் கோமாலை மேற்கு ஓடை உள்ளிட்ட இடங்களில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊறல் பேரல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதனையடுத்து, 11 பேரல்களில் இருந்த 2,200 லிட்டர் சாராய ஊறல் மற்றும் லாரி டியூப்பில் இருந்த 50 லிட்., சாராயம் ஆகியவற்றை அழித்தனர்.

Tags

Next Story