50 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் 1974-77 ஆண்டுகளில் படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சந்தித்து கொண்டு தங்கள்ன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
முதியவர்களாக சந்தித்து கொண்ட மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். கோல்டன் ஜூப்ளி விழாவிற்கு கல்லூரி முதல்வர் கமலக்கண்ணன் தலைமையேற்று பழைய மாணவர்களை வாழ்த்திப் பேசினார்கள். கல்லூரி முதல்வர், முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் நினைவுப் பரிசை வழங்கினார்கள். முன்னாள் மாணவர்கள் கல்லூரி முதல்வர் அவர்களையும், பொருளாதாரத்துறை பேராசிரியர்களையும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.
கல்லூரிக்கு நினைவு பரிசாக பீரோ மற்றும் பிரிண்டர் ஒன்றை முன்னாள் மாணவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்கள். கல்லூரியில் பணிபுரியும் பொருளாதார பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். இந்த விழாவில் அனைத்து முன்னாள் மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு விடை பெற்றனர்.