ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் தாராபுரம் வருகை

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் தாராபுரம் வருகை

தாராபுரம் வருகை தந்த எம்பி

முத்துலட்சுமி ப்யூல்ஸ் நிறுவன இந்தியன் ஆயில் விற்பனை நிலையத்திற்கு வருகை தந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே முத்துலட்சுமி ப்யூல்ஸ் நிறுவன இந்தியன் ஆயில் விற்பனை நிலையம் கடந்த பத்தாம் தேதி காலை திறப்பு விழா நடைபெற்றது.

இந்த திறப்பு விழாவிற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இந்தியன் ஆயில் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தனர். இந்நிலையில் தாராபுரம் பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே. இ.பிரகாஷ் பொள்ளாச்சி சாலையில் உள்ள முத்துலட்சுமி ப்யூல்ஸ் நிறுவன இந்தியன் ஆயில் விற்பனை நிலையத்திற்கு வருகை புரிந்தார்.

அப்போது திமுக நகரக் கழகத் துணைச் செயலாளரும், விற்பனை நிலையத்தில் உரிமையாளருமான கமலக்கண்ணன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் நகர மகளிர் அணி துணை செயலாளர் செலின் பிலோமினா, நகர பொருளாளர் சக்தி வேல், மாவட்ட பிரதிநிதிகள் சீனிவாசன், எஸ்.எம்.யூசப், பைப் செந்தில்,

வைஸ் மாரிமுத்து, ஜோ. மணிமாறன், ரவி, பிரகாஷ், தா.பா .சக்திவேல், ஸ்டார் மணிகண்டன், அக்பர் பாஷா, கண்ணன் ,முருகேஷ் உட்பட 20க்கும் மேற்பட்ட திமுக வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story