156 பயனாளிகளுக்கு ரூ.38.67 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

156 பயனாளிகளுக்கு ரூ.38.67 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


தமிழ்நாடு அரசின் இரண்டரை ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி திறப்பு.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அமைச்சர் சு.முத்துசாமி தமிழ்நாடு அரசின் இரண்டரை ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.

156 பயனாளிகளுக்கு ரூ.38.67 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், எடை குறைவான 10 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.2,000் தொடர்ச்சியாக பெறுவதற்கான ஆணையும், 78 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெர் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறப்பாக செயலாற்றிய ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு வெண்கலப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story