கோ-கோ போட்டியில் 11வது ஆண்டாக வெற்றி பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி

கோ-கோ போட்டியில் 11வது ஆண்டாக வெற்றி பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி

வெற்றி பெற்ற மாணவர்களுடன் ஆசிரியர்கள்  

மாவட்ட அளவிலான கோகோ போட்டியில் எருமைப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வெற்றி பெற்றது.

எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இளையோர் மாணவர்களுக்கான மாவட்ட கோகோ குழு போட்டிகள் நடைபெற்றன. இதில் எட்டு வட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.இதில் இறுதிப் போட்டியில் எருமைப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் முத்துக்காபட்டி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களும் விளையாடினர் இதில் எருமப்பட்டி மாணவர்கள் வெற்றி பெற்று பிப்ரவரி மாதத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் மாநில போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பதினோராவது ஆண்டாக வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் உடற்கல்வி இயக்குனர் சிவா, உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில், நடராஜன் ,கீதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.



Tags

Next Story