ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா: வேலூரில் நேரடி ஒளிபரப்பு

ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா: வேலூரில் நேரடி ஒளிபரப்பு
ஈஷா நிர்வாகிகள்
ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா, வேலூரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா, வேலூரில் நேரடி ஒளிபரப்பு என கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் மணிவண்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, வரும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம், வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்ட டார பகுதிகளில், பிப் 10 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது.

மேலும் கோவை ஈஷா யோக மையத்தில், மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை வேலூரில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தொடங்கி வைத்தார்.

அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 2 அன்று வேலூரை வந்தடைந்தது இந்த ரதமானது வேலூர் நகரின் பல்வேறு இடங்களுக்கு பயணித்த பிறகு காட்பாடி, ஆற்காடு, சோளிங்கர் கே.வி குப்பம் குடியாத்தம், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு பிப் 10 ஆம் தேதி ஆம் தேதி வரை பயணிக்க உள்ளது.

கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது. இதுமட்டுமின்றி, இந்த ஆண்டு கோவை யோக மையத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் 36இடங்களில் மஹாசிவராத்திரி கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் பகுதியில் அமைந்துள்ள ராணி மஹாலில் இவ்விழா நேரடி" மார்ச் 8 ஆம் தேதி மாலை 5 மணி முதல் மார்ச் 9 ஆம் தேதி அதிகாலை 6:00 மணி வரையில் நடைபெற உள்ளது இந்த நேரடி ஒளிபரப்பில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story