ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள்

புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, அத்தியாவசிய பொருட்களை வழங்கிய எம்எல்ஏ சிவகாமி சுந்தரி.
கரூர் மாவட்டத்தில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, அத்தியாவசிய பொருட்களை வழங்கிய எம்எல்ஏ சிவகாமி சுந்தரி. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோயம்பள்ளி கடைவீதி பகுதியில் ரேஷன் கடை பல வருடமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. ரேஷன் கடையை, 2022-23 AGAMT திட்டத்தில் புதிதாக கட்ட திட்டமிட்டு கட்டி முடிக்கப்பட்டது. இன்று அந்த ரேஷன் கடையை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த ரேஷன் கடைக்கு கட்டுப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசாமி, கோயம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி மயில்ராஜ், தாந்தோனி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகாமி வேலுச்சாமி, கரூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மணவாளன், ஊர் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடை திறப்பு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story