ராசிபுரம் அருகே மின்கம்பி உரசியதில் வைக்கோலுடன் ஈச்சர் வாகனம் எரிந்து நாசம்

ராசிபுரம் அருகே மின்கம்பி உரசியதில் வைக்கோலுடன் ஈச்சர் வாகனம் எரிந்து நாசம்

தீ விபத்து 

ராசிபுரம் அருகே மின்கம்பி உரசியதில் வைக்கோலுடன் ஈச்சர் வாகனம் எரிந்து நாசம்..
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 30. இவர் ஈச்சர் வாகனத்தில் வைக்கோல் 200 கட்டுகளை ஏற்றிக் கொண்டு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கரடியானூர் பகுதியில் விற்பனை செய்ய வந்துள்ளார். அப்போது, மின்கம்பி உரசியதில் வைக்கோலில் தீ பிடித்து, மலமல வென எரிந்தது. தப்பிய டிரைவர் ராஜ்குமார், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வைக்கோல் முழுவதும் எரிந்து நாசமானது. ஈச்சர் வாகனம் 80 சதவீதம் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து, ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு கட்டு வைக்கோலின் விலை ரூ.300 என்பது குறிப்பிடத்தக்கது. அதிகளவில் லோடு ஏற்றுவதாலே இவ்வாறான விபத்து அடிக்கடி நடக்கிறது. என அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story