ஆலத்தூர் வட்டத்தில் மதிப்பீட்டு முகாம்கள்

ஆலத்தூர் வட்டத்தில் மதிப்பீட்டு முகாம்கள்

அதிகாரி

ஆலத்தூர் வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் மதிப்பீட்டு முகாம்கள் நடைபெற உள்ளது.

பெரம்பலுார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அலிம்கோ நிறுவனத்தினர் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க மதிப்பீட்டு முகாம்கள் பெரம்பலுார் மாவட்டத்தில் ஆலத்துார் வட்டத்தில் கீழ்காணும் மூன்று இடங்களில் நடைபெற உள்ளது.

10.01.2024 அன்று பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 11.01.2024 அன்று நக்கசேலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 12.01.2024 அன்று அல்லிநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் முகாம் நடைபெறும்.

பெரம்பலுார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த உதவி உபகரணங்கள் வழங்கும் மதிப்பீட்டு முகாம்களில் அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story