மோடிக்கு தெரியவில்லை - பெரிய கருப்பன்

மோடிக்கு தெரியவில்லை - பெரிய கருப்பன்

இது மோடிக்கு புரியவில்லையே? எவ்வளவு பெரிய தவறு இது என அமைச்சர் பெரியகருப்பன் கடுமையாக பேசினார்.  

இது மோடிக்கு புரியவில்லையே? எவ்வளவு பெரிய தவறு இது என அமைச்சர் பெரியகருப்பன் கடுமையாக பேசினார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மேலவாணியங்குடி, முத்துப்பட்டி, நாலுகோட்டை, கீழப்பூங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கலாம்.

சிறுபான்மை மக்களாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அவரவர்கள் அவர்கள் சாமியை வணங்கி வருகிறார்கள். மோடி தலையிட்டு இந்த சாமியை கும்பிட வேண்டும், அந்த சாமி கும்பிட வேண்டும் என்று கூறுகிறார். மதசார்பற்ற இந்த நாட்டில் ஒரு மதத்தின் பெயரால் ஆட்சி செய்யும் இவர்களால் மிகப்பெரிய பின் விளைவுகள் ஏற்படும். இந்தியாவில் வேண்டுமானால் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கலாம். அருகில் உள்ள நாடுகள் எல்லாம் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் உள்ளனர். நம் நாட்டிலிருந்து வேலைக்காக அங்கு சென்றுள்ளனர்.

சிறுபான்மை மக்கள் துன்பப்பட்டால் நம் பிள்ளைகளை விரட்டி விட மாட்டானா இல்லையா? இது சாதாரண மக்களுக்கு கூட புரியும், இது மோடிக்கு புரியவில்லையே? எவ்வளவு பெரிய தவறு இது என பேசினார்

Tags

Next Story