தாயை தாக்கிய முன்னாள் ராணுவ வீரர் - நடவடிக்கை எடுக்காத போலீசார்

தாயை தாக்கிய முன்னாள் ராணுவ வீரர் - நடவடிக்கை எடுக்காத போலீசார்

தனலட்சுமி 

ஜோலார்பேட்டை அருகே முன்னாள் ராணுவ வீரர் தாக்கியதில் அவரது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர்குப்பம் ஜங்காலபுரம் பகுதியில் வசிப்பவர் அப்பாவு. இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு மூத்த மகன் மார்கபந்தீஸ்வரன், இளைய மகன் லோகேஸ்வரன் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தந்தையை முன்னாள் ராணுவ வீரரான லோகேஸ்வரன் அப்பாவுவை பராமரித்து வந்த நிலையில் லோகேஸ்வரனுக்கு மட்டும் இரண்டு ஏக்கர் நிலத்தை அவரது பெயரில் எழுதி வைத்துள்ளாதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மார்கபந்திஈஸ்வரிடம் தாய் தனலட்சுமி வசித்து வந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரரான லோகேஸ்வரன் தனலட்சுமியிடம் சென்று உனது பெயரில் இருக்கும் இடங்களை தனக்கு எழுதி வைக்கப் கோரி தகாத வார்த்தைகள் கூறி தாய் என்றும் பாராமல் நெஞ்சின் மீது காலால் எட்டி உதைத்துள்ளார் இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதேபோல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறித்து காவல்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags

Next Story