பவானியில் காதல் தகராறில் முன்னாள் காதலனை இந்நாள் காதலன் குத்தி கொலை

பவானியில் காதல் தகராறில் முன்னாள் காதலனை இந்நாள் காதலன் குத்தி கொலை

கொலையான முன்னாள் காதலன்

பவானியில் காதல் தகராறில் முன்னாள் காதலனை இந்நாள் காதலன் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சேது மணிகண்டன் (23), சேதுமணிகண்டன் பவானி, காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலிக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். இருவரும் பிரிந்த நிலையில் இளம்பெண் தற்போது பவானி செங்காடு பகுதியைச் சேர்ந்த குகநாதன் (26) என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 15ஆம் தேதி நேற்று இளம் பெண்ணுக்கு பிறந்தநாள் என்பதால் முன்னாள் காதல் ஆன சேது மணிகண்டன் , குகநாதனுக்கு,

போன் செய்து இளம்புன்னுடன் பேச வேண்டும் உடனே பவானி அரசு மருத்துவமனை அருகே வருமாறு நள்ளிரவு அழைத்துள்ளார்.

அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்போது சேதுமணிகண்டன் குகநாதனை அடித்ததாக கூறப்படுகிறது இதில் ஆத்திரமடைந்த குகநாதன் காய்கறி வெட்டும் கத்தியை இடுப்பில் மறைத்து வைத்திருந்ததை எடுத்து சேது மணிகண்டனின் மார்பு பகுதியில் குத்தியுள்ளார்.

இதில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார், தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் சேது மணிகண்டனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர், அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது சேது மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சேது மணிகண்டனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பவானி போலீசார் கொண்டு சென்றனர். இதற்கிடையே குகனாதனை கைது செய்த பவானி போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story