முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆண்டிப்பட்டி கோட்டையில் உற்சாக வரவேற்பு.

முன்னாள் முதல்வர்  ஓபிஎஸ்க்கு ஆண்டிப்பட்டி கோட்டையில் உற்சாக வரவேற்பு.

வரவேற்பு 

தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஈரோடு செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெறும் கட்சியின் ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக தேனியில் இருந்து கரூர் வழியாக ஈரோடு செல்வதற்காக நேற்று மாலை 7- மணி அளவில் கரூர் மாவட்டத்தின் எல்லை பகுதியாக உள்ள ஆண்டிப்பட்டி கோட்டை டோல்கேட் அருகே காரில் வந்தார். அப்போது ,அவருக்கு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் தலைமையில் தாரை தப்பட்டை முழங்க, பூரண கும்ப மரியாதை உடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை ஏ.டி.பி. கணேசன், மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன், மாவட்ட அவைத்தலைவர் கணேசன், மாவட்ட பிரதிநிதி அன்பரசன், மாவட்ட மாணவரணி செயலாளர் மாரியப்பன், கரூர் வடக்கு நகர செயலாளர் அன்பழகன், கரூர் மாநகர துணை செயலாளர் ஓம் சக்தி சேகர், தெற்கு நகர செயலாளர் கோபால், மகளிர் அணியினர், சிறுபான்மை அணியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட, வட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் கரூர்- ஈரோடு சாலையில் உள்ள நொய்யல் பகுதியில் கட்சியினர் விடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story