சிவகாசியில் முன்னாள் அமைச்சர் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பாவடித்தோப்பு திடலில் நாளை (28.03.2024 ) நாளைய தினம் அஇஅதிமுகவின் தலைமையிலான கூட்டணியான தேமுதிக கட்சி சார்பாக விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விஜயபிரபாகர் அவர்களை ஆதரித்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரத்திற்கு, சிவகாசி மாநகருக்கு வருகைதரும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு,விருதுநகர் மாவட்ட அஇஅதிமுகழகம் சார்பாக சிறப்பான எழுச்சிமிக்க வரவேற்பு அளிப்பது குறித்து கழக நிர்வாகிகளுடன், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சர் மற்றும் கழக அமைப்பு செயலாளரும்,விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிகளின் கழக தலைமை தேர்தல் பொறுப்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றன.மேலும் ஆலோசனை கூட்டத்திற்கு சிவகாசி,திருத்தங்கல், ஒன்றிய பகுதியை சேர்ந்த செயலாளர்கள் உள்பட மகளிரணி மற்றும் பல்வேறு பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story