சிவகாசியில் 31 கிராமங்களில் முன்னாள் அமைச்சர் தீவிர பிரச்சாரம்

சிவகாசியில் 31 கிராமங்களில் முன்னாள் அமைச்சர் தீவிர பிரச்சாரம்
முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்
சிவகாசியிலுள்ள 31 கிராமங்களில் முன்னாள் அமைச்சர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலுள்ள 31 கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்து கொட்டும் முரசு சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்கு சேகரித்தார்.விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சிவகாசி ஒன்றியத்திலுள்ள கோப்பைநாயக்கன்பட்டி,

வேண்டுராயபுரம்,சாமிநத்தம், அருணாசலபுரம்,ஈஞ்சார், நடுவப்பட்டி,கிருஷ்ணப்பேரி, நிறைமதி,நாகலாபுரம், வடபட்டி, பூவநாதபுரம்,எஸ்.புதுப்பட்டி,உட்பட 31 கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொட்டும் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.பிரச்சாரத்தின் போது வேட்பாளர் விஜயபிரபாகரன் அதிமுக மாவட்ட கழக துணைச் செயலாளர் வேண்டுராயபுரம்

சுப்பிரமணியன்,சிவகாசி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் லட்சுமிநாராயணன்,சிவகாசி பகுதி கழக செயலாளர் கருப்பசாமிபாண்டியன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வடபட்டி, ஈஞ்சார், நடுவப்பட்டி கிராமங்களில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,வேட்பாளர் விஜயபிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினர்.

Tags

Next Story