அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல்

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் பழ வகைகளை வழங்கினார். தூத்துக்குடி திரேஸ்புரத்தில் கிழக்கு பகுதி அதிமுக சார்பில் பகுதி செயலாளரும் முன்னாள் துணை மேயருமான பி.சேவியர் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

. இந்நிகழ்வில் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், அதிமுக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா.சுதாகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story