பராசக்தி மாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் சாமி தரிசனம்

சித்ராபௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார்.
சித்ராபௌர்ணமி திருநாளை முன்னிட்டு அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமானகே டி ராஜேந்திர பாலாஜி விருதுநகர் அருள்மிகு ஸ்ரீபராசக்தி மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் தரிசனம் மேற்கொண்டார். உடன் நகரச் செயலாளர் டி.பி.எஸ் வெங்கடேஷ் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சாந்தி மாரியப்பன்,, நகர துணைச் செயலாளர் ப. கண்ணன், நகரஇலக்கிய அணி செயலாளர் சந்தோஷ் பாண்டியன், கழக பிரமுகர்கள் எம்.பி. எம். அய்யனார், எஸ். எம்.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story