தச்சங்குறிச்சி வாடிவாசலை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் !

தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தமிழ்நாட்டின் 2024-ம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசலை அமைக்கும் பணியினை முன்னால் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பார்வையிட்டது குறித்து விராலிமலையில் எம்எல்ஏ அலுவலகத்தில் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் வருகிற ஆறாம் தேதி நடைபெற இருக்கும் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த பணியினை முன்னாள் அமைச்சர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டார் பின்னர் அங்கு அமைக்கப்பட்டு வரும் பேரிகாட், மருத்துவ பரிசோதனை செய்யும் இடம், காளைகள் கலெக்சன் பாயிண்ட் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார் பின்னர் ஊர் தலைவர், விழா குழுவினருடன் அமர்ந்து பேசி ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து கலந்தாலோசித்தார் இந்த நிகழ்வில் ஊர் தலைவர் பிரான்சிஸ் ஒன்றிய செயலாளர் பாண்டியன் கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள், விழா குழுவினர் உடன் இருந்தனர்

Tags

Next Story