தஞ்சாவூரில் மார்ச்.8 இல் முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூரில் மார்ச்.8 இல் முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பைல் படம்

தஞ்சாவூரில் முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும், மார்ச்.08 ஆம் தேதியன்று காலை 10 மணியளவில், மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது குறைகளை மனுவாக அளிக்கலாம். அவ்வாறு மனு அளிக்கக்கூடிய முன்னாள் படைவீரர் மற்றும் அவரை சார்ந்தோர்கள் இரண்டு பிரதிகளில் மனுக்களை தங்கள் அடையாள அட்டையுடன் இணைத்து அளித்திட வேண்டும். எனவே, இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப், தெரிவித்துள்ளார்.

Tags

Next Story