மணல் கடத்தலை வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு

மணல் கடத்தலை வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு

வெட்டுப்பட்ட நபர்


மணல் கடத்தலை வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிக்கொண்டிருந்த எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த சகோதர்கள் முனிசாமி, குமரேசன் ஆகியோரை முன்னாள் இராணுவ வீரர் உமாபதி வீடியோ எடுத்துள்ளார். வீடியோ எடுத்த முன்னாள் இராணுவ வீரர் உமாபதியை முனிசாமி, குமரேசன் மற்றும் இவர்களது மகன்கள் சூர்யா, நவின் ஆகியோர் செல்போனை பறித்துக்கொண்டு விரட்டு விரட்டி வெட்டியுள்ளனர்.

படுகாயம் அடைந்த முன்னாள் இராணுவ வீரர் உமாபதி மேல்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அதன் பின்னர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் காயமடைந்த முன்னாள் ராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து மேல்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story