நீட்விலக்கு கையெழுத்து முகாம்... தி.மு.க.,வினரை முற்றுகையிட்டு பாஜகவினர் வாக்குவாதம்.

நீட்விலக்கு கையெழுத்து முகாம்... தி.மு.க.,வினரை முற்றுகையிட்டு பாஜகவினர் வாக்குவாதம்.

நீட்விலக்கு கையெழுத்து முகாம்... தி.மு.க.,வினரை முற்றுகையிட்டு பாஜகவினர் வாக்குவாதம். 

நீட்விலக்கு கையெழுத்து முகாம் நடத்திய தி.மு.க.,வினரை முற்றுகையிட்டு பாஜகவினர் வாக்குவாதம் செய்தனர்.

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு நீட் விலக்கு கையெழுத்து முகாம் நடத்திய திமுக வினரை முற்றுகையிட்டு பாஜகவினர் வாக்குவாதம். போலீசார் இரு தரப்பினரையும் அப்புறப்படுத்தினர்.

நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் தொடர்பாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு அவிநாசி ஒன்றிய திமுக சார்பாக கையெழுத்து பெறுவதற்கான நிகழ்வாக டேபிள் வைத்து நீட் எதிர்ப்புக்கு விருப்பமுள்ள மாணவ மாணவிவிகளிடம் கையெழுத்து பெரும் நிகழ்ச் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திமுகவினர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கையெழுத்து பெற்றுக் கொண்டிருந்தனர். அப்பொழுது கல்லூரி முன்பு இந்த முகாம் நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அவிநாசி காவல் துறையினர், இரு தரப்பினர் இடையே சமாதானம் செய்து வைத்து பா.ஜ.க. வினரை அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, உரிய அனுமதி பெற்று பிறகு கல்லூரி முன்பு முகாம் நடத்துமாறு திமுகுவினருக்கும் அறிவுத்தி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story