மகளிர் சுயஉதவிக்குழு பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை

மகளிர் சுயஉதவிக்குழு பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை

 மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. 

மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில், மகளிர் திட்டத்தின்கீழ் செயல்பட்டுவரும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி கண்காட்சி மற்றும் விற்பனை 10.01.2024 முதல் 20.01.2024 முடிய 11 நாட்கள் ஈரோடு குமலன்குட்டை பெருந்துறை ரோட்டில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள், மண்பாண்டங்கள், பவானி ஜமக்காளம், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டுப்புடவைகள், துண்டுகள், ஆயத்த ஆடைகள், எண்ணெய்கள், பாத்ரூம் க்ளீனர்ஸ், மரச்சாமான்கள், மூங்கில் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், பாக்குமட்டை பொருட்கள், சிறுதானியங்கள், சிறுதானிய உணவுப்பொருட்கள், தேன், தின்பண்டங்கள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள், வேர்க்கடலை, மஞ்சள், குண்டு வெல்லம், மற்றும் நாட்டுச்சர்க்கரை போன்ற சிறப்பான பொருட்கள், நியாயமான விலையில் இக்கண்காட்சியில் இடம்பெறவுள்ளது.

பூமாலை வணிக வளாகத்தில் நடைபெறும் கண்காட்சியில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்கி சுய உதவிக்குழுக்களை ஊக்குவித்து, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் இக்கண்காட்சிக்கு வருகை புரிந்து, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story