திருப்போரூர் அருகே சாலையில் மின்விளக்கு அமைக்க எதிர்பார்ப்பு

திருப்போரூர் அருகே சாலையில் மின்விளக்கு அமைக்க எதிர்பார்ப்பு

இருளில் மூழ்கிய சாலை

திருப்போரூர் அருகே சாலையில் மின்விளக்கு அமைக்க எதிர்பார்த்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் அடுத்த ஆலத்துாரில் சிட்கோ தொழிற்பேட்டை, 1982ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இங்கு, 30 க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகளில், 10,000 த்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் வேலை முடிந்து இரவு வீடு திரும்புகின்றனர். அதேநேரத்தில், மூன்றாவது ஷிப்ட்டாக நள்ளிரவில் வேலைக்கு செல்கின்றனர். ஆலத்துார் சிட்கோவிற்கு செல்லும் பிரதான சாலையில் மின் விளக்கு பொருத்தப்படாமல் உள்ளது. இதனால், அந்த சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால்,

பெண்கள் உட்பட அனைவரும் இச்சாலை வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, இரவில் பெண்கள் பாதுகாப்பாக செல்ல சாலையோரம் மின் விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story