பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு

பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு

கனிமொழி எம்.பி 

பாலருவி விரைவு ரயில் சேவையை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்துள்ள ரயில்வே வாரியத்திற்கு கனிமொழி எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.
பாலருவி விரைவு ரயில் சேவையை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்துள்ள ரயில்வே வாரியத்திற்கு கனிமொழி எம்பி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி விரைவு ரயில் சேவையைத் தூத்துக்குடி வரை நீட்டித்தல் மற்றும் தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிய விரைவு ரயில் சேவை வேண்டும் என்ற எனது ஐந்து ஆண்டுக்கால தொடர் கோரிக்கையை ஏற்றிருக்கும் ரயில்வே வாரியத்திற்கு நன்றி. இத்துடன் தூத்துக்குடியில் நீண்ட காலமாக நிலுவையிலுள்ள எங்களின் பிற கோரிக்கைகளையும் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும் விரைந்து முடித்துத் தரவேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story