முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் 

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு ரூ.1 லட்சம் காசோலை மற்றும் பதக்கம் ஆகியவையோடு வழங்கப்படும். 2024-ம் ஆண்டிற்கான விருது வரும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

15 முதல் 35 வயதுள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டில் 1.4.2023 முதல் 31.3.2024 வரை செய்த சேவைகள் மட் டுமே கணக்கில் எடுக்கப்படும். இணையதளம் மூலம் 31-5-24 மாலை 4 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப் பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story