நாகபாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
நாகாபடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி
செங்கம் அடுத்த நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு ஜூன் 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
மேலும் சில பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அரசு உத்தரவின்படி நேரடி சேர்க்கை நடைபெற இருப்பதால் மாணவர்கள் நேரடியாக சான்றிதழ்களுடன் கல்லூரியில் முதல்வரை தொடர்பு கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story